Welcome to TamilFlame

  • Change style to Blue
  • Change style to Red
  • Change style to Green
  • Change style to Pink

தமிழீழ செய்திகள்  Page Last Updated on: July 08 2008 09:54:50.

ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றால் மட்டுமே புலிகளுடன் பேச்சு: மைத்திரிபால சிறிசேன
ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
Posted on 08 Jul 2008 by admin

 

 

உயிர் அச்சுறுத்தல் காரணமாக அடைக்கலம் கோரியவர்களை யாழ். சிறையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை
உயிராபத்தின் காரணமாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்து, யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்புக் காவலில் உள்ள 300 அப்பாவி பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு யாழ். மாவட்ட நீதிபதி ஒருவர் நடவடிக்கை எடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted on 08 Jul 2008 by admin

 

 

சரத் பொன்சேகாவின் குழுவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்: ஜோசப் மைக்கல் பெரேரா
சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழான ஒரு குழுவே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
Posted on 08 Jul 2008 by admin

 

 

1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா?: லக்ஸ்மன் செனிவிரட்ன கேள்வி
மன்னாரில் படையினர் இடங்களை கைப்பற்றுகின்றனரா அல்லது புலிகள் கைப்பற்ற விடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக தெரிவித்துள்ள, சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன, 1994, 1995-களில் நடந்ததை படையினர் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Posted on 08 Jul 2008 by admin

 

 

கடந்த ஒரு மாதத்தில் 112 படையினர் பலி: 793 பேர் படுகாயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த ஒரு மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் 112 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 793 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார்.
Posted on 08 Jul 2008 by admin

 

 

துணைப் படைக்குழுவின் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரான பிள்ளையானுக்கு அந்நாட்டு அரசாங்கம் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியுள்ளது.
Posted on 08 Jul 2008 by admin

 

 

பரந்தனில் வான்குண்டுத் தாக்குதல்: இளைஞர் படுகாயம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Posted on 08 Jul 2008 by admin

 

 

படைத்துறை வெற்றிகள் பேச்சுக்களுக்கு மாற்றீடாகாது: முன்னாள் ஐஆர்ஏ போராளி
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும் என முன்னாள் ஐஆர்ஏ போராளியும், மூத்த தளபதியும், தற்போது அதிகாரப்பகிர்வு பெற்றுள்ள அரசின் பிரதி முதலமைச்சருமான மார்ட்டின் மைக்கைனீஸ் தெரிவித்துள்ளார்.
Posted on 08 Jul 2008 by admin

 

 

ஜூலை 10 புறக்கணிப்பில் தமிழர்களும் பங்கேற்க வேண்டும்: த.தே.கூ. அழைப்பு
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
Posted on 07 Jul 2008 by admin

 

 

தமிழர்களின் எண்ணெய் வளத்தை சுரண்டும் ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனம் கைச்சாத்து
தமிழ் மக்களின் தாயகப் பகுதியான மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று சிறிலங்கா அரசாங்கமும் இந்தியாவின் கேய்ன் எண்ணெய் அகழ்வு நிலையமும் கைச்சாத்திட்டுள்ளன.
Posted on 07 Jul 2008 by admin

 

 

சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க அறிவித்துள்ளார்.
Posted on 07 Jul 2008 by admin

 

 

48 மணிநேரத்தில் பாரிய தாக்குதல் அச்சம்: வேலை நிறுத்தத்தை கைவிடக் கோரல்
சிறிலங்காவின் தென்பகுதியில் எதிர்வரும் 48 மணிநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த புலனாய்வுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக கூறி எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன அறிவித்துள்ளார்.
Posted on 07 Jul 2008 by admin

 

 

மகிந்தவுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் -தந்திப் போராட்டம்-
இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஊடகவியலாளர்கள் இன்று திங்கட்கிழமை தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
Posted on 07 Jul 2008 by admin

 

 

ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறப்பு
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓமந்தை சோதனைச்சாவடி ஒருவார காலத்திற்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை மாலை மீண்டும் பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
Posted on 07 Jul 2008 by admin

 

 

வவுனியாவில் எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞனின் உடலம் மீட்பு
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாறம்பைக்குளத்தில் இன்று திங்கட்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
Posted on 07 Jul 2008 by admin

 

 

இந்தியாவுக்கு எதிரான மகிந்தவின் மறைமுகப்போர்: பின்னணியில் நடப்பது என்ன?
இந்திய உயர்மட்டக்குழுவினர் மூவர் சிறிலங்கா சென்று சார்க் உச்சி மாநாடு தொடர்பாக விதித்துச் சென்றுள்ள நிபந்தனைகளால் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய மத்திய அரசுக்கு எதிராக மறைமுகப்போரில் ஈடுபட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.
Posted on 06 Jul 2008 by admin

 

 

சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர்.
Posted on 06 Jul 2008 by admin

 

 

கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாக தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவில் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார்.
Posted on 06 Jul 2008 by admin

 

 

தமிழ்நாட்டு கரையோரங்களில் ஆளில்லாத உளவு வானூர்திகளை பயன்படுத்த இந்திய அரசு முடிவு
தமிழ்நாட்டு கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு வானூர்திகளை பயன்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
Posted on 06 Jul 2008 by admin

 

 

வட்டக்கச்சியில் வான்தாக்குதல்: முதியவர் படுகாயம்- வீடுகள் சேதம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சிப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன.
Posted on 06 Jul 2008 by admin

 

 

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 Next >>